Monday, August 31, 2009

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்.........................

பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.

சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.

பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.

முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.

நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள் தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது.

உங்களுக்கு தெரியுமா?

தெ‌ரி‌ந்து கொ‌ள்வோ‌ம் குழ‌ந்தைகளா..........


தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.



உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.


நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.


ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சி அடைகிறது.


விரல் நுனிஇ உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1இ300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.


இ‌ங்‌கிலா‌ந்து நா‌ட்டி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவரை ‌நிழ‌ல் ‌பிரதம‌ர் எ‌ன்று அழை‌க்‌கி‌ன்றன‌ர்.


இ‌ந்‌திய ‌விமான‌ப்படை அரு‌ங்கா‌ட்‌சியக‌ம் புது டெ‌ல்‌லி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.


மலே‌சியா‌வி‌ன் தே‌சிய க‌னி ப‌ப்பா‌ளி.

விஜய்கு வந்த புதிய தலைவலி.........

>
விஜய்கு வந்த புதிய தலைவலி






தமிழ்நாட்டில் பிரபல நடிரான tp[apd; படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தினால் விஜய்க்கு புதுயச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.


சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது.


இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளமையானது விஜய் படங்களின் வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



இலங்கையில் நடத்தப்பட்ட போருக்குக்கும் தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் காரணம் என தெரிவிக்கும் அவர்கள் சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இதற்கு மூலக்காரணம் எனவும் கருதுகின்றனர்.


இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.


ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.





ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் சிந்தனையில்...........

மனிதனின் சிந்தனையில்...........





மனிதன் தனது கைகளைக் கொண்டு வியத்தகு பல விந்தைகளை செய்து வரும் இந்த தருணத்திலும் சிலர் இப்படியும் யோசிக்கினறனர்.


கைகளை எதற்காகவேண்டும் பயண்படுத்தாலம் என்று யோசித்தவன் இதற்காகவேனும் பயண்படுத்தாலம் என சிந்திக்க வைத்துள்ளான்.




அவனுடைய சிந்தைனையின் சில துளிகளை அள்ளி தெளிக்கின்றேன்....
ஆர்வமுடையவர்கள் இதனை முயற்சித்தும் பார்க்கலாம்.
















குழந்தைகளே உங்களுக்காக......

குழந்தைகளே உங்களுக்காக......


நம் முன்னோர்கள் குழந்தைகளுக்காக பல்வேறு கருத்துக்களையும், சிந்தனைத்துளிகளையும் காலத்திற்கும அழியாவன்னம் கொடுத்துவிட்டு போயுள்ளனர்.




இந்த சிந்தனை துளிகளும், கருத்துக்களும் ஒரேவார்த்தையில் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் அவர்கள் கொடுத்துள்ளமையும் இங்கு சிறப்பம்சமே!

குழந்தைகளே! அவர்கள் தந்துவிட்ட இந்த பொன்மொழிகளை கற்று நீரும் வளம்பெருவீராக......

மறக்கக் கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு
உயர்வுக்கு வழி - உழைப்பு
மிக மிக நல்ல நாள் - இன்று
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
விலக்க வேண்டியது - விவாதம்
செய்யக் கூடியது - உதவி
செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
நம்பக் கூடாதது - வதந்தி
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
மிகவும் கொடிய நோய் - பேராசை
மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
மிகவும் வேண்டாதது - வெறுப்பு

Sunday, August 30, 2009

மனித நேயத்தின் மற்றுமொரு அவதாரமா? லாரன்ஸ்!!!!

மனித நேயத்தின் மற்றுமொரு அவதாரமா? லாரன்ஸ்!!!!




மனித நேயம் மழுங்கிப்போன இந்தக் காலத்தில் கலைஞர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்வது கலையுலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் இவ்வாறான மனித நேயமிக்கவர்கள் அதிகம் காணப்படுவதே தமிழன் என்று பெருமைப்படுவதற்கான முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

'லாரன்ஸ் சாரிடபிள் ட்ரெஸ்ட்' மூலமாக ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தியிருக்கிறார் நடன இயக்குனர் லாரன்ஸ்.

இதற்காக சுதந்திர தினத்தன்று முதல்வரிடமிருந்து சிறந்த சமூக சேவகருக்கான விருதினைக் கூட பெற்றுள்ளார்.




இந்த விருதுக்கு அவர், நூறு வீதம் பொருத்தமானவர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.

இந்த ட்ரெஸ்ட் மூலமாக அவர் 20 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளதுடன், அவர்கள் எல்லோரும் ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாரன்ஸின் சாரிடபிள் ட்ரெஸ்ட் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுவதை கேள்விப்பட்டு 20 பேர் அவரை அணுகியுள்ளனர்.

இந்த விபரத்தை அவர் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதனை தொடர்ந்து, முதல்வரும் உடனடியாக, 'முதல்வரின் இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை' திட்டத்தின் மூலம் இதய அறுவை சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

லாரன்ஸின் இந்த உதவியால் அந்த 20 ஏழைக் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவுகிறது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்துடனும் தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்



.

உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம்தான்.

அவருடைய இந்த அளப்பரிய சேவை தொடர மனதார வாழ்த்துகின்றோம் வசதியின்றி ஏங்கும் எத்தனையோ குழந்தைகளின் வரவினை எதிர்பார்த்தபடி..............

Friday, August 28, 2009

டெஸ்ட் போட்டியில் இலங்கையனியின் வளர்ச்சி...

டெஸ்ட் போட்டியில் இலங்கையனியின் வளர்ச்சி...






வேகமாக வளர்ந்து வரும் இல்லை வளர்ந்து விட்ட டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளுக்கு மத்தியில் பிரபல்யம் மற்றம் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டி அழிந்து போகுமோ என்ற நிலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணியும் தமது திறமையினை நிரூபித்தே வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறுமா? என எதிர்பார்த்திருந்த நாட்கள் இன்று மலையேறி போய்விட்டது.

ஆம் இன்றைய தினத்தில் ஐ.சீ.சீ யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை இலங்கை கிரிக்கட் இரசிகர்களை மாத்திரமின்றி ஆசிய கண்டத்தின் கிரிக்கட் இரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். காரணம்; ஐ.சி.சி டெஸட் கிரிக்கட் போட்டி தரவரிசை பட்டியல்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணியொன்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அதுவும் இலங்கை அணிக்கே இரண்டாம் இடம் எனும் போது இலங்கையன் என்ற வகையில் நான் பெறுமையடைகின்றேன்.





2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.சி.சி யின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக 4 ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமையானது கிரிக்கட் விளையாடும் வளாந்து வரும் நாடுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் தங்களாலும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையினையும் அவர்கள் மனதில் விதைத்துள்ளது என்றால் அது சாலப்பொருந்தும்.

இப்படி இலங்கை அணியின் அபரிதமான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தற்கும் இலங்கை அணி கடந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் காட்டிவரும் திறமையும், ஈட்டிவரும் வெற்றிகளுமே மூலக்காரணமாக அமைகின்றது.

இலங்கை அணியின் இந்த மாற்றததிற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால்....... இந்த மாற்றததிற்கு அணியின் தலைமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடு, வெற்றிக்காக இறுதிவரை போராடும் குணம் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றது. அதிலும் அணியின் தலைமைத்துவ மாற்றம் இதில் பெரும் பங்காற்றி வருகின்றதாகவே நான் கருதுகின்றேன்.

தலைமைப் பொறுப்பேற்ற சங்ககார மிகவும் திறமையாக செயற்படுகின்றார் என்று கூறுவதை விட அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கிறது என்றே கூறலாம்.

சில போட்டிகளில் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் அவர் தவறான முடிவெடுத்ததனையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்க அது சாத்தியமானதையும் நாம் கண்டுள்ளோம்.





இது ஒருபுறம் இருக்க டெஸ்ட் போட்டிகளில் இலங்கை உருவாக்கிய மற்றுமொரு அதிரடி ஆரம்பம் தான் டில்ஷான். டில்ஷானின் அதிரடியான ஆரம்பம் எதிரணியின் எதிரணியின் ஆரம்ப பந்துவீச்சு வரிசையை சீர்குழைப்பதுடன் அவர்களிடைய உளரீதியான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. டெஸ்ட் போட்டிகளில் மிககவனம் செலுத்தப்படவேண்டடிய ஓட்ட வேகம் என்பது இதன் மூலம் அதாவது டில்சானின் அதிரடிமூலம் அதிகரிக்க இலங்கை கணிசமான ஓட்டங்களை குவிக்க உதவுகின்றது. இதுவும் டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியில் முக்கிய பாத்திரமாகின்றது.

அடுத்து நாம் கண்டிப்பாக கூறவேண்டியது திலான் சமரவீரவின் பொறுப்பான துடுப்பாட்டம். மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட வரும் இவர் விக்கட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை பெறுவது இலங்கையணியின் மற்றுமொரு சக்தியாகும்.
இவர்களை விடுத்து தேவையான சந்தர்ப்பங்களில் திறமையை வெளிபடுத்தும் அணித்தலைவர் மற்றம் முன்னாள் அணித்தலைவர்களின் துடுப்பாட்டத்துடன் புதிய வரவான மெத்தியூசின் துடுப்பாட்டமும் ஓட்டங்களை பெற துணைபுரிகின்றது.

இவையனைத்தையும் தொடர்ந்து டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றி என்பது எதிரணியின் 20 விக்கட்டுக்களிலேயே தங்கியுள்ளதாhல், பயமுறுத்தும் பந்துவீச்சும் இலங்கையின் வெற்றியின் மற்றுமொரு பரினாமமே!. குரசேகர, துஷார வேகத்தில் மிரட்ட முரளி, மென்டிஸ் சுழலில் கலக்;க இலங்கையின் வெற்றி பயணம் தொடர்கிறது.

இருந்த போதிலும் ஒரு சிறிய வருத்தம் இன்றும் தொடர்கிறது.. தாயகத்தில் தலைமிர வைத்த சிங்கங்கள் அந்நிய மண்ணிலும் அசத்துமா? என்ற கேள்வி எம்மக்கள் மத்தியில் இன்றுவரையில் இல்லாமலில்லை.

சொந்த மண்ணில் திறமைகளை காட்டும் இலங்கை, அந்நிய மண்ணிலும் திறமையாக விளையாடி ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பெற அன்புடன் வாழ்த்தும் பல இலட்ச இரசிகர்களில் நானும் ஒருவனாய் இலங்கை அணியின் முதலிடத்தை எதிர்பார்த்தபடி.........