
நம் முன்னோர்கள் குழந்தைகளுக்காக பல்வேறு கருத்துக்களையும், சிந்தனைத்துளிகளையும் காலத்திற்கும அழியாவன்னம் கொடுத்துவிட்டு போயுள்ளனர்.


இந்த சிந்தனை துளிகளும், கருத்துக்களும் ஒரேவார்த்தையில் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் அவர்கள் கொடுத்துள்ளமையும் இங்கு சிறப்பம்சமே!
குழந்தைகளே! அவர்கள் தந்துவிட்ட இந்த பொன்மொழிகளை கற்று நீரும் வளம்பெருவீராக......
மறக்கக் கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு
உயர்வுக்கு வழி - உழைப்பு
மிக மிக நல்ல நாள் - இன்று
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
விலக்க வேண்டியது - விவாதம்
செய்யக் கூடியது - உதவி
செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
நம்பக் கூடாதது - வதந்தி
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
மிகவும் கொடிய நோய் - பேராசை
மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
மிகவும் வேண்டாதது - வெறுப்பு

No comments:
Post a Comment