Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, September 1, 2009

வேட்டைக்காரனுக்கு விமோசனம்


வேட்டைக்காரனுக்கு விமோசனம்





இளைய தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள்.

ஆதனால் அவர் தனது 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக செயற்படுகின்றார்.




விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்கத்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது.

கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதிரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

அதுதான் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார். இந்த சன்பிக்சர் நிறுவனத் எப்பாடு பட்டாவது தனது படத்தை ஓடவைத்துவிடும் என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படும் செய்தியாகிவிட்டது.

இந்த நிறுவனம் சுமார் படங்களையே அபிரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெளித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.





இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது யாவரும் அறிந்ததே. இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினாகவுள்ளது.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


Monday, August 31, 2009

சசிகுமா‌ரின் புது ஹீரோ

சசிகுமா‌ரின் புது ஹீரோ........





சசிகுமார் அடுத்து இயக்கும் படம் சென்னையை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்கம் மட்டும்தான்.


நாடோடிகள் படத்தில் நடித்த அனன்யா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சுப்பிரமணியபுரத்தைப் போலவே இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. படத்தின் ஹீரோ...?


அதுதான் ஆச்ச‌ரியம். 54 வயது நபர்தான் ஹீரோ. புதுமுகம் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என சிட்டி முழுக்க தேடி வந்தனர். எவ்வளவு முயன்றும் சசிகுமார் எதிர்பார்த்த நபர் கிடைக்கவில்லையாம்.





அதனால் பசங்க, நாடோடிகள் படங்களில் நடித்த ஜெயபிரகாஷை ஹீரோவாக்கியிருக்கிறார் சசிகுமார். ஹீரோ முடிவானதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.

Thank you : tamil.webduniya.com

விஜய்கு வந்த புதிய தலைவலி.........

>
விஜய்கு வந்த புதிய தலைவலி






தமிழ்நாட்டில் பிரபல நடிரான tp[apd; படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தினால் விஜய்க்கு புதுயச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.


சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது.


இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளமையானது விஜய் படங்களின் வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



இலங்கையில் நடத்தப்பட்ட போருக்குக்கும் தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் காரணம் என தெரிவிக்கும் அவர்கள் சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இதற்கு மூலக்காரணம் எனவும் கருதுகின்றனர்.


இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.


ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.





ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.