Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, September 1, 2009

காதல் வந்துவிட்டதா?

காதல் வந்தால்..........



காதலில் முதல் பிரச்சினையே காதலர்கள்தான். என்ன இப்படி சொல்லிவிட்டான் என்று யோசிக்க வேண்டாம். ஆம்! முதல் பிரச்சினை மட்டுமல்ல, கடைசிப் பிரச்சினையும் காதலர்கள்தான்.

சரி, நாம் இங்கு முதல் பிரச்சினையை முதலில் சொல்லிவிடுவோம்.

அவள் என்னைப் பார்க்கிறாள், அவன் என்னைப் பார்க்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் காதலர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன.



அவர்களுடனான பேச்சையோ அல்லது தொடர்பையோ உருவாக்குவதுதான்.

முதலில் அவர்களுடன் பேச முயற்சிக்க வேண்டும். பேசும்போது அவர்களது மனதில் என்ன இருக்கிறது என்பது புலனாகிவிடும்.

பிறகு தயங்காமல் காதலை வெளிப்படுத்த வேண்டும். தயங்கி தயங்கி தாமதித்தால் காதல் கல்யாணத்தில் முடியாது, உங்கள் காதலருக்கு கல்யாணம் ஆவதில்தான் முடியும்.

எனவே அவர் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்.

பல இடங்களில் காதலை வெளிப்படுத்தாமலேயே காதல் முடிந்து விடுவது உண்டு. இதற்கு காதலர்கள்தான் காரணம்.

ஆவன் சொல்வான் என்று இவளும், இவள் சொல்வாள் என்று அவனும் தயங்கியதே காதல் விதை வளராமல் மண்ணில் மக்கிப்போவதற்கு காரணமாக இருக்கும்.

காதலை சொல்லத் தைரியம் மிக அவசியம். அதை விட காதலை சொல்லும் விதம் மிக மிக முக்கியம்.



நாம் காதலை சொல்லும் போது, அவர்களுக்கு இதுவரை காதல் வராமல் இருந்தால் கூட காதல் மலரும்படியும் மறுப்பு தெரிவிக்க முடியாதபடியும் காதலை தெரிவிக்க வேண்டும்.

நீ இல்லையேல் நான் இல்லை. என் உயிர் நீ தான் என்றெல்லாம் பழைய புராணம் பாடி காதலியின் இதயத்திற்கு பதிலாக உயிரை வாங்கிவிடாதீர்கள்.

நச்சென்று உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள்.

அதே சமயம், நீ இருந்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்பது போன்ற தன்னம்பிக்கை மிக்க வாக்கியங்களை உங்கள் உரையாடல் அல்லது கடிதத்தில் நிரப்புங்கள்.

காதலை சொல்ல முடிவெடுத்த பின்னர், அதனை தெளிவாக குழப்பாமல் தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

இன்று காதலைச் சொல்ல எத்தனையோ வழிகள் வந்துவிட்டன, தொலைபேசி, எஸ்எம்எஸ்கள், ஈமெயில், என உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.




எல்லாமே தயாராக இருந்தாலும், காதலை சொல்ல முதலில் நீங்கள்தான் தயாராக வேண்டும்.

காதலர்களுக்கு சில விஷயங்கள்

காதலிப்பவரா நீங்கள் ?





காதலர்களில் இரு வகையினர் உள்ளனர்......

பெரும்பாலும் பேசிப் பழகியப் பின்னர் காதலர்களாக மாறியவர்களும், பார்த்த மாத்திரத்திலேயே காதல் உண்டாகி காதலைத் தெரிவித்த பின் காதலர்களானவர்களும் உண்டு.
இதில் எந்த வகையாக இருந்தாலும், காதலர்கள் சில அடிப்படையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, காதலர்கள் எங்கு சென்றாலும் இருவரது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள். செல்லும் இடமும், போய் வரும் நேரமும் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் அமையும்படி திட்டமிடுங்கள்.



காதலரை மற்றவர்கள் முன்பு குறைவாக மதிப்பிட்டுப் பேசாதீர்கள். இது உங்கள் காதலர் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம் காதலரிடம் இருக்கும் குறைகளைப் பட்டியலிடாதீர்கள்.
அதற்கு பதிலாக அவரிடம் இருக்கும் நற்குணங்களை எடுத்துக் கூறி இப்படிப்பட்ட நீங்களா இதைச் சொன்னீர்கள் அல்லது செய்தீர்கள் என்று கூறினால் சற்று மேலாக இருக்கும்.

காதலரை விட நீங்கள் உயர்ந்தவர் என்ற அடிப்படையில் எந்த பேச்சும் இருக்கக் கூடாது. இருவரும் ஒரே உயிர் என்பது போன்றும், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது போன்றும் உங்கள் பேச்சு இருக்கட்டும்.
மற்றவர்களைப் பற்றிய அடிக்கடி காதலிப்பவரிடம் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு சளிப்பு ஏற்பட்டுவிடும்.



இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உங்கள் பேச்சும் செய்கையும் இருக்கட்டும்.
இவையனைத்தும் நான் இணையத்தளமொன்றில் வாசித்தவை, அவையனைத்தையும் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
என்னருமை காதலர்களே நீங்களும் உங்கள் காதலர்களுடன் சந்தோசமாய் காதல் பயணத்தை தொடர என இனிய வாழ்த்துக்கள்!