Saturday, September 5, 2009

Wednesday, September 2, 2009

தீராத ஏக்கம் எப்போது தீரும்?



இலங்கை அணிக்கோ தனது சொந்த மண்ணில் டிவன்டி-20 வெற்றிக்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.



ஆமாம் இதுவரையில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 3 டிவன்டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் முhலாவது வெற்றியை பார்த்து இரசிக்கவேண்டும் என்ற ஏக்கம் இலங்கை இரசிகர்களிடையே தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

கடந்த டிவன்டி-20 உலககிண்ண போட்டியில் ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாது இறுதி போட்டிவரை முன்னேறிய இலங்கை அணிக்கோ தமது சொந்த மண்ணில் டிவன்டி-20 போட்டியொன்றில் வெற்றியை பெறுவதென்பது எட்டாக்கணியாகவேயுள்ளது.



டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிற்பாக செயல்பட்டு வரும் இலங்கை அணி டிவன்டி-20 போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. எனினும் தாயகததில் அவர்களின் இரசிகர்கள் மத்தியில் விளையாடி முதலாவது வெற்றிக்காக இலங்கை போராடி வருகின்றமை நன்கு புலப்படுகின்றது.

டிவன்டி-20 போட்டிகளை பொறுத்தவரையில் ஒரு சிறு தவறுசெய்தாலும் அது போட்டியையே திசைதிருப்பிவிடும், டிவன்டி-20 போட்டிகளில் விடும் சிறு சிறு தவறுகளும் போட்டியின் முடிவையே மாற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம்.

உதாரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாது டிவன்டி-20 போட்டியில் 20 வது ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீரர் அடிக்கமுயள அது விக்கட்காப்பாளரின் கைளுக்கு செல்ல துடுப்பாட்ட வீரர்கள் ஓட்பெற முயற்சித்து ஓடினர் அவர்களை ரன்அவுட் செய்வதற்காக பந்தை எறிந்தார் விக்கட்காப்பாளர் குமார் சங்ககார.


அந்த பந்து விக்கட்டில் படாமல் எதிரே இருந்த களத்தடுப்பாளரையும் தான்டி செல்லவே அந்த பந்தில் மூன்று ஓட்டங்கள் பெறப்பட்டது. இந்த போட்டியிலும் இலங்கை அணி மூன்று ஓட்டங்களாலேயே தோல்வியடைந்தது.

ஆக இறுதி பந்தில் அந்த தவறிழைக்கப்படாவிட்ருந்தால் பெரும்பாலும் இலங்கைஅணி இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் ஆக சிறு தவறும் போட்டியின் முடிவை மாற்றும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.



இது போக அண்ணிய மண்ணில் டிவன்டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இலங்கை தமது சொந்த மண்ணில் சோடை போதவற்கு என்ன காரணம்?

சொந்த மண்ணில் விளையாடுகின்றோம் என்ற எண்ணப்பாடா? அல்லது தமக்கு நன்கு பரீட்சயமான மைதானம் தானே இலகுவில் வெற்றிபெறலாம் என்ற நிலைப்பாடா? அல்லது சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கத்தில் விளையாடுவதனால் ஏற்படும் மன அழுத்தமா? எது எவ்வாறாயினும் டிவன்டி-20 போட்டியை பெறத்தவறையில் தாயத்தில் சிங்கங்கள் தலைத்தூக்கவில்லை என்றே கூறலாம்.

எனவே அடுத்துவரும் டிவன்டி-20 போட்டிகளிலாவது இலங்கையி அழுத்தங்களுக்கு முகம் கொடுக்காது புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விட்ட தவறுகளை திருத்தி வெற்றி பெர முயற்சிக்கவேண்டும்.

இதுவரையில் இலங்கை அணி வென்ற அனைத்து டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளையும் தொலைக்காட்சியிலேயே பார்த்து இரசித்த இரசிகர்களில் நானும் ஒருவனாய், சொந்த மண்ணில் முதலாவது டிவன்டி-20 வெற்றியை எதிர்பார்த்தப்படி...... ஏக்கத்துடன்.....


Tuesday, September 1, 2009

காதல் வந்துவிட்டதா?

காதல் வந்தால்..........



காதலில் முதல் பிரச்சினையே காதலர்கள்தான். என்ன இப்படி சொல்லிவிட்டான் என்று யோசிக்க வேண்டாம். ஆம்! முதல் பிரச்சினை மட்டுமல்ல, கடைசிப் பிரச்சினையும் காதலர்கள்தான்.

சரி, நாம் இங்கு முதல் பிரச்சினையை முதலில் சொல்லிவிடுவோம்.

அவள் என்னைப் பார்க்கிறாள், அவன் என்னைப் பார்க்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் காதலர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன.



அவர்களுடனான பேச்சையோ அல்லது தொடர்பையோ உருவாக்குவதுதான்.

முதலில் அவர்களுடன் பேச முயற்சிக்க வேண்டும். பேசும்போது அவர்களது மனதில் என்ன இருக்கிறது என்பது புலனாகிவிடும்.

பிறகு தயங்காமல் காதலை வெளிப்படுத்த வேண்டும். தயங்கி தயங்கி தாமதித்தால் காதல் கல்யாணத்தில் முடியாது, உங்கள் காதலருக்கு கல்யாணம் ஆவதில்தான் முடியும்.

எனவே அவர் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்.

பல இடங்களில் காதலை வெளிப்படுத்தாமலேயே காதல் முடிந்து விடுவது உண்டு. இதற்கு காதலர்கள்தான் காரணம்.

ஆவன் சொல்வான் என்று இவளும், இவள் சொல்வாள் என்று அவனும் தயங்கியதே காதல் விதை வளராமல் மண்ணில் மக்கிப்போவதற்கு காரணமாக இருக்கும்.

காதலை சொல்லத் தைரியம் மிக அவசியம். அதை விட காதலை சொல்லும் விதம் மிக மிக முக்கியம்.



நாம் காதலை சொல்லும் போது, அவர்களுக்கு இதுவரை காதல் வராமல் இருந்தால் கூட காதல் மலரும்படியும் மறுப்பு தெரிவிக்க முடியாதபடியும் காதலை தெரிவிக்க வேண்டும்.

நீ இல்லையேல் நான் இல்லை. என் உயிர் நீ தான் என்றெல்லாம் பழைய புராணம் பாடி காதலியின் இதயத்திற்கு பதிலாக உயிரை வாங்கிவிடாதீர்கள்.

நச்சென்று உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள்.

அதே சமயம், நீ இருந்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்பது போன்ற தன்னம்பிக்கை மிக்க வாக்கியங்களை உங்கள் உரையாடல் அல்லது கடிதத்தில் நிரப்புங்கள்.

காதலை சொல்ல முடிவெடுத்த பின்னர், அதனை தெளிவாக குழப்பாமல் தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

இன்று காதலைச் சொல்ல எத்தனையோ வழிகள் வந்துவிட்டன, தொலைபேசி, எஸ்எம்எஸ்கள், ஈமெயில், என உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.




எல்லாமே தயாராக இருந்தாலும், காதலை சொல்ல முதலில் நீங்கள்தான் தயாராக வேண்டும்.

காதலர்களுக்கு சில விஷயங்கள்

காதலிப்பவரா நீங்கள் ?





காதலர்களில் இரு வகையினர் உள்ளனர்......

பெரும்பாலும் பேசிப் பழகியப் பின்னர் காதலர்களாக மாறியவர்களும், பார்த்த மாத்திரத்திலேயே காதல் உண்டாகி காதலைத் தெரிவித்த பின் காதலர்களானவர்களும் உண்டு.
இதில் எந்த வகையாக இருந்தாலும், காதலர்கள் சில அடிப்படையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, காதலர்கள் எங்கு சென்றாலும் இருவரது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள். செல்லும் இடமும், போய் வரும் நேரமும் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் அமையும்படி திட்டமிடுங்கள்.



காதலரை மற்றவர்கள் முன்பு குறைவாக மதிப்பிட்டுப் பேசாதீர்கள். இது உங்கள் காதலர் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம் காதலரிடம் இருக்கும் குறைகளைப் பட்டியலிடாதீர்கள்.
அதற்கு பதிலாக அவரிடம் இருக்கும் நற்குணங்களை எடுத்துக் கூறி இப்படிப்பட்ட நீங்களா இதைச் சொன்னீர்கள் அல்லது செய்தீர்கள் என்று கூறினால் சற்று மேலாக இருக்கும்.

காதலரை விட நீங்கள் உயர்ந்தவர் என்ற அடிப்படையில் எந்த பேச்சும் இருக்கக் கூடாது. இருவரும் ஒரே உயிர் என்பது போன்றும், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது போன்றும் உங்கள் பேச்சு இருக்கட்டும்.
மற்றவர்களைப் பற்றிய அடிக்கடி காதலிப்பவரிடம் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு சளிப்பு ஏற்பட்டுவிடும்.



இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உங்கள் பேச்சும் செய்கையும் இருக்கட்டும்.
இவையனைத்தும் நான் இணையத்தளமொன்றில் வாசித்தவை, அவையனைத்தையும் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
என்னருமை காதலர்களே நீங்களும் உங்கள் காதலர்களுடன் சந்தோசமாய் காதல் பயணத்தை தொடர என இனிய வாழ்த்துக்கள்!

வேட்டைக்காரனுக்கு விமோசனம்


வேட்டைக்காரனுக்கு விமோசனம்





இளைய தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள்.

ஆதனால் அவர் தனது 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக செயற்படுகின்றார்.




விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்கத்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது.

கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதிரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

அதுதான் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார். இந்த சன்பிக்சர் நிறுவனத் எப்பாடு பட்டாவது தனது படத்தை ஓடவைத்துவிடும் என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படும் செய்தியாகிவிட்டது.

இந்த நிறுவனம் சுமார் படங்களையே அபிரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெளித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.





இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது யாவரும் அறிந்ததே. இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினாகவுள்ளது.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


பேரீச்சம் பழ ரவா லட்டு

தேவையான பொருட்கள்


ரவை அரை கிலோ

பேரீச்சம்பழம் அரை கிலோ

வேர்க்கடலை 200 கிராம்

சர்க்கரை கால் கிலோ

ரின் பால் (மில்க் மெய்ட்) கால் கிலோ

நெய் தேவையானளவு


செய்முறை


முதலில் பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.








கடாயில் நெய்யை ஊற்றி (நெய் அதிகமாக இருந்தால் வாசனையும் நன்றாக இருக்கும்) அதில் பேரீச்சம் பழத்தையும் வேர்கடலையையும் போட்டு நன்கு வதக்கவும்.



பேரீச்சம் நன்கு மசிந்தவுடன் ரவையை பேரீச்சம்பழ கலவைக்குள் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். அல்லது அடுப்பிலிருந்து இறக்கியும் ரவையை போட்டு கிளறலாம்.


ரவையும்> பேரிச்சம் பழமும் நன்கு கலந்த பிறகு மில்க் மெய்டை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.


பின்னர் கடாயை இறக்கிஇ சூடு தணிவதற்குள் லட்டுகளாக பிடித்துக் கொள்ளவும்.


உடலுக்கு உகந்த பேரீச்சம் பழ ரவா லட்டு தயார்.


கூடுதலாக இனிப்பு சுவை தேவைப்படுபவர்கள்ஈ ரவை போடும் போதே சர்க்கரையும்ம் போட்டு கிளற வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் இது உகந்தது.

Thank you : tamil.webdunia.com