Saturday, September 5, 2009
Wednesday, September 2, 2009
தீராத ஏக்கம் எப்போது தீரும்?
இலங்கை அணிக்கோ தனது சொந்த மண்ணில் டிவன்டி-20 வெற்றிக்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.

ஆமாம் இதுவரையில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 3 டிவன்டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் முhலாவது வெற்றியை பார்த்து இரசிக்கவேண்டும் என்ற ஏக்கம் இலங்கை இரசிகர்களிடையே தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
கடந்த டிவன்டி-20 உலககிண்ண போட்டியில் ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாது இறுதி போட்டிவரை முன்னேறிய இலங்கை அணிக்கோ தமது சொந்த மண்ணில் டிவன்டி-20 போட்டியொன்றில் வெற்றியை பெறுவதென்பது எட்டாக்கணியாகவேயுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிற்பாக செயல்பட்டு வரும் இலங்கை அணி டிவன்டி-20 போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. எனினும் தாயகததில் அவர்களின் இரசிகர்கள் மத்தியில் விளையாடி முதலாவது வெற்றிக்காக இலங்கை போராடி வருகின்றமை நன்கு புலப்படுகின்றது.
டிவன்டி-20 போட்டிகளை பொறுத்தவரையில் ஒரு சிறு தவறுசெய்தாலும் அது போட்டியையே திசைதிருப்பிவிடும், டிவன்டி-20 போட்டிகளில் விடும் சிறு சிறு தவறுகளும் போட்டியின் முடிவையே மாற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம்.
உதாரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாது டிவன்டி-20 போட்டியில் 20 வது ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீரர் அடிக்கமுயள அது விக்கட்காப்பாளரின் கைளுக்கு செல்ல துடுப்பாட்ட வீரர்கள் ஓட்பெற முயற்சித்து ஓடினர் அவர்களை ரன்அவுட் செய்வதற்காக பந்தை எறிந்தார் விக்கட்காப்பாளர் குமார் சங்ககார.
அந்த பந்து விக்கட்டில் படாமல் எதிரே இருந்த களத்தடுப்பாளரையும் தான்டி செல்லவே அந்த பந்தில் மூன்று ஓட்டங்கள் பெறப்பட்டது. இந்த போட்டியிலும் இலங்கை அணி மூன்று ஓட்டங்களாலேயே தோல்வியடைந்தது.
ஆக இறுதி பந்தில் அந்த தவறிழைக்கப்படாவிட்ருந்தால் பெரும்பாலும் இலங்கைஅணி இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் ஆக சிறு தவறும் போட்டியின் முடிவை மாற்றும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
இது போக அண்ணிய மண்ணில் டிவன்டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இலங்கை தமது சொந்த மண்ணில் சோடை போதவற்கு என்ன காரணம்?
சொந்த மண்ணில் விளையாடுகின்றோம் என்ற எண்ணப்பாடா? அல்லது தமக்கு நன்கு பரீட்சயமான மைதானம் தானே இலகுவில் வெற்றிபெறலாம் என்ற நிலைப்பாடா? அல்லது சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கத்தில் விளையாடுவதனால் ஏற்படும் மன அழுத்தமா? எது எவ்வாறாயினும் டிவன்டி-20 போட்டியை பெறத்தவறையில் தாயத்தில் சிங்கங்கள் தலைத்தூக்கவில்லை என்றே கூறலாம்.
எனவே அடுத்துவரும் டிவன்டி-20 போட்டிகளிலாவது இலங்கையி அழுத்தங்களுக்கு முகம் கொடுக்காது புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விட்ட தவறுகளை திருத்தி வெற்றி பெர முயற்சிக்கவேண்டும்.
இதுவரையில் இலங்கை அணி வென்ற அனைத்து டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளையும் தொலைக்காட்சியிலேயே பார்த்து இரசித்த இரசிகர்களில் நானும் ஒருவனாய், சொந்த மண்ணில் முதலாவது டிவன்டி-20 வெற்றியை எதிர்பார்த்தப்படி...... ஏக்கத்துடன்.....
Tuesday, September 1, 2009
காதல் வந்துவிட்டதா?



காதலர்களுக்கு சில விஷயங்கள்



வேட்டைக்காரனுக்கு விமோசனம்
வேட்டைக்காரனுக்கு விமோசனம்



பேரீச்சம் பழ ரவா லட்டு
• ரவை அரை கிலோ
• பேரீச்சம்பழம் அரை கிலோ
• வேர்க்கடலை 200 கிராம்
• சர்க்கரை கால் கிலோ
• ரின் பால் (மில்க் மெய்ட்) கால் கிலோ
• நெய் தேவையானளவு
செய்முறை
முதலில் பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
கடாயில் நெய்யை ஊற்றி (நெய் அதிகமாக இருந்தால் வாசனையும் நன்றாக இருக்கும்) அதில் பேரீச்சம் பழத்தையும் வேர்கடலையையும் போட்டு நன்கு வதக்கவும்.
பேரீச்சம் நன்கு மசிந்தவுடன் ரவையை பேரீச்சம்பழ கலவைக்குள் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். அல்லது அடுப்பிலிருந்து இறக்கியும் ரவையை போட்டு கிளறலாம்.
ரவையும்> பேரிச்சம் பழமும் நன்கு கலந்த பிறகு மில்க் மெய்டை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் கடாயை இறக்கிஇ சூடு தணிவதற்குள் லட்டுகளாக பிடித்துக் கொள்ளவும்.
உடலுக்கு உகந்த பேரீச்சம் பழ ரவா லட்டு தயார்.
கூடுதலாக இனிப்பு சுவை தேவைப்படுபவர்கள்ஈ ரவை போடும் போதே சர்க்கரையும்ம் போட்டு கிளற வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் இது உகந்தது.


