விஜய்கு வந்த புதிய தலைவலி

தமிழ்நாட்டில் பிரபல நடிரான tp[apd; படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தினால் விஜய்க்கு புதுயச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளமையானது விஜய் படங்களின் வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


இலங்கையில் நடத்தப்பட்ட போருக்குக்கும் தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் காரணம் என தெரிவிக்கும் அவர்கள் சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இதற்கு மூலக்காரணம் எனவும் கருதுகின்றனர்.
இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment